கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விருதுநகர் அருகே இருசக்கர வாகன விபத்தில்  இளைஞர் சாவு

விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:05 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த ராயப்பச்சாமி என்பவரின் மகன் ராஜதுரை(30). இவர் விருதுநகரிலிருந்து அவரது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, ஆர்.ஆர்.நகர் நான்கு வழிச்சாலையில் மின்சார வாரியம் எதிரே தடுப்புச் சுவரில் எதிர்பாரத விதமாக மோதியதில் தூக்கி வீசியது. இதில், ராஜதுரை படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம்.

இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் ராயப்பசாமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.